சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா பயணம் செய்ய முயற்சித்த 47 பேரை கடற்படையினர் நேற்று(27) இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
படகு மூலம்
நீர்கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து கண்காணிப்பு நடவடிக்கையின் போது இவர்கள் பலநாள் படகில் பயணித்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்களில் 34 ஆண்கள், ஆறு பெண்கள், ஏழு பிள்ளைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றதோடு ஒன்று முதல் ஐம்பது வயது வரையிலானவர்கள் இவ்வாறு தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம், நாத்தான்டிய, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்